வால்டர் சமர் போர்டு என்ற இந்த மனுஷன் தான் வரலாற்றின் மிகவும் துரதிர்ஷ்டவசமான மனிதர் என்று அழைக்கப்படுகிறார். பிரிட்டனை சேர்ந்த இவர் இப்படி அழைக்கப்படுவதற்கு ஒரு நல்ல காரணம் உள்ளது.
இங்கிலாந்து ராணுவத்தில் இருந்த இவரை இராணுவமானது, 1918-ஆம் ஆண்டு நடந்த முதல் உலகப்போரில் பெல்ஜியம் நாட்டிற்கு அனுப்பியது.
அங்கு குதிரை சவாரி செய்து கொண்டிருந்த, இவர் மீது திடீரென மின்னல் தாக்கியதில் இடுப்புக்கு கீழ் பகுதி முழுவதும் செயலிழந்ததால் பணியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டார். ஆனாலும் ஆறே மாதத்தில் பழைய நிலைக்கு மீண்டு வந்த இவர் தனது புதிய வாழ்க்கையை கனடாவில் துவங்கினார்.
அங்கு சென்ற பிறகும் இவரை விட்டு வைக்காத மின்னல் சரியாக ஆறு வருடம் கழித்து 1924-ஆம் ஆண்டு அங்குள்ள ஆற்றில் இவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீண்டும் தாக்கியது. அந்த தாக்குதலில் சுமார் 2 வருடம் கடினப்பட்டு பழைய நிலைக்கு வந்தார்.
பிறகு தன் வாழ்க்கையை அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த போது மீண்டும் ஆறு வருடங்கள் கழித்து 1930-இல் ஒரு பார்க்கில் நின்று இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த அவரை திரும்பவும் மின்னல் தாக்கியதில் மோசமான நிலைக்கு சென்றார். இந்த முறையை இரண்டு வருடங்கள் போராட்டத்திற்கு பின்பு உயிரை விட்டார்.
இவரது உடலானது கனடாவின் வான்கூவர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் இறந்த பிறகும் விட்டுவைக்காத மின்னல் 1936-ஆம் ஆண்டு மீண்டும் அதே ஆறு வருடங்கள் வரிசையில் இவரது கல்லறையை தாக்கி அந்த கற்களை சிதர செய்தது.
இறந்த பிறகும் கூட ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை வால்ட்டர் இப்படி மின்னலால் தாக்கப்பட்டார் என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ள நிலையில் இப்படி இறந்த பிறகும் மின்னல் தாக்கப்பட்ட நபர் என்பதால் வரலாற்றில் மிகவும் துரதிர்ஷ்டசாலி யான மனிதர் என்று இவரை எல்லோரும் அழைக்கிறார்கள். யாரிடம் என்ன சாபம் வாங்கினாரோ தெரியவில்லை இறந்த பின்பும் மின்னலிடம் இப்படி அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்.





Comments
Post a Comment