இந்தியாவின் அழகான பூக்கள்
பூக்கள் என்றாலே பிடிக்காதவர்கள் இந்த உலகில் யாரும் கிடையாது. அவைகளை பார்க்கும்போது மனதுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அழகான பூக்களை இந்தியாவில் அதிக அளவில் பெண்கள் தலையில் சூடி கொள்ளவும், பல நிகழ்ச்சிகளில் மேடைகளை அழகு படுத்தவும் பயன்படுத்துகிறார்கள். அப்படி பட்ட பூக்களில் மிகவும் அழகான 10 இந்திய பூக்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
1. பாரிஜாதம் அல்லது பவளமல்லி
பாரிஜாதம் அல்லது பவளமல்லி மலர்கள், இரவு மல்லிகை என்றும் அழைக்கப்படுகின்றன. இது புதர் செடி வகையை சேர்ந்தது. இந்த மலர்களில் 7 - 8 இதழ்கள் இருக்கும். தண்டு ஆரஞ்சு - சிவப்பு நிறத்தில் உள்ளன. இந்த மலர்கள், பூஜை உள்ளிட்ட ஆன்மீக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. பவளமல்லி மலர்கள் பகலில் மலராமல், இரவுநேரத்தில் மட்டும் மலரும் தன்மை கொண்டது.
![]() |
| பாரிஜாத மலர் |
பாரிஜாத மலர் தாவரத்தின் மருத்துவ பலன்கள் பல, இவை வேர்கள் முதல் இலைகள் வரை ஒவ்வொரு பகுதியும் பல்வேறு சிறப்புப் பண்புகளையும், மருத்துவ பயன்களையும் கொண்டுள்ளன. சிறிய தொட்டியில் வைத்தால் கூட அருமையாக வளர்ந்து நறுமணமிக்க மற்றும் அழகான பெரிய பெரிய பூக்களை நமக்கு கொடுக்கும். Buy Now
2. செம்பருத்தி(Sembaruthi)
செம்பருத்தி இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் வளரும் அழகான பூக்களை பூக்கும் தாவர இனம். இதன் பூ மிகவும் மருத்துவ குணங்களை கொண்டதாகும். இது கிழக்கு ஆசியாவில் தோன்றிய ஒரு தாவரமாகும். செம்பருத்தி சீன ரோஜா எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் செம்பருத்தி மலேசிய நாட்டின் தேசிய மலராகும். இது பொதுவாகவே அழகுத்தாவரமாக தான் வளர்க்கப்படுகிறது.
![]() |
| இள மஞ்சள் செம்பருத்தி |
இந்தியாவின் பல பகுதிகளில் அழகுப்பொருளாகவும், தலையில் சூடிக்கொள்ளவும், கடவுளை வழிபடவும் இந்த பூ பயன்படுவதுடன், தற்போது சந்தைகளில் பல வண்ணங்களிலும் கிடைக்கிறது. Buy Now
3. தாமரை
தாமரை ஒரு நீர்வாழ்த்தாவரம். இது பல்லாண்டுகள் வாழும் தன்மை உடையது. இதன் தாவரவியல் பெயர் நெலும்போ நூசிபேரா(Nelumbo nnucifera) என்பதாகும். நீர்நிலைகள் உள்ள இடங்களிலேயே அதிகம் காணப்படும். குறிப்பாக 25 முதல் 35° cc வெப்பநிலையில் நன்கு வளரும். தாமரையின் பூக்கள்,இதழ்கள்போன்றவை அக்கால ஆயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகிறது.எகிப்திலிருந்து அசிரியாவிற்குப் பரவிய தாமரை அங்கிருந்து பாரசீகம், இந்தியா, சீனா முதலிய நாடுகளுக்கும் பரவியது.
தாமரைக்கு மட்டத்தண்டு கிழங்கு உண்டு.இது சேற்றில் புதைந்து இருக்கும்.நீரின் மட்டத்திற்கு ஏற்ப நீண்ட காம்புடன் கூடிய இலைகள் நீரின்மீது மிதக்கும்.தாமரையின் இலையின்மீது தண்ணீர் ஒட்டாது.மழை பொழியும்போது இலையின் மீது தண்ணீர் பட்டு ஓடி விடும்.இதற்கு காரணம் இலைகளில் கெட்டியான மெழுகுப் பூச்சு உள்ளது.இது தூசு மற்றும் பாக்டீரியா போன்றவற்றை ஒட்டாமல் பாதுகாக்கிறது.இதனால் தாமரை இலை சுத்தமாகப் பளிச்சிடுகிறது.சேற்றில் அழுக்கு நீரில் வளர்ந்தாலும் இலையும்,பூவும் சுத்தமாகவே இருக்கும். ஆசியக் கண்டத்தில் தண்ணீர் தோட்டங்களில் தாமரை பெருமளவில் வளர்க்கப்படுகிறது.தாமரையின் விதைகள் பல ஆண்டுகளுக்கு முளைக்கும் திறன் கொண்டவை.
இந்தியாவின் தேசிய மலர் தாமரை(Lotus).1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி தேசிய மலராக அங்கீகரிக்கப்பட்டது.தாமரையை தூய்மையின் அடையாளமாகக் கருதுகின்றனர்.ஏனெனில் தாமரை சேறு நிறைந்த,அழுக்கான நீரில் வளர்ந்தாலும் அதன் பூக்கள் அழுக்குபடியாமல் தூய்மையாக இருக்கின்றன.சேற்றில் மலர்ந்த செந்தாமரை என்பதற்குப் பொருத்தமாக உள்ளது.தாமரை மலர் தன்னைதானே தூய்மைபடுத்திக் கொள்கிறது எனக் கூறுவார்கள். இப்படிபட்ட அழகிய தாமரையை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். Buy Now




Comments
Post a Comment